Search This Blog

Tuesday, April 7, 2026

கொட்டு முரசே

 

சுதந்திரக் காற்று வீசும் நாட்டின்

கல்லூரியில் படிக்கும் மாணவன்

வளமான தேசத்தைப் பற்றி எழுதுவது



சுவரொட்டிகள் அலங்கரித்த பேருந்துகள்

பராமரிப்புக்கு ஏங்கும் உயிர்கள்

சத்தம் நிறைந்த வீடுகள்

என ஆயிரம் குறைகள்



கண்களோடு இருட்டில் வாழும்

கிராமத்து வயலின் விவசாயிகள்

வேலை தேடும் திறமைசாலிகள் 

என அப்பாற்பட்ட மனிதர்கள்



ஆனால் இந்தியன் என்ற உணர்வு 

அனைவரையும் ஒன்றாக மாற்றுகிறது

தேசிய கொடியை மேலும் உயர்த்திய

இந்த நாட்டின் அடையாளங்களுக்காகவும்



எல்லைகளை குடும்பங்களின் நினைவோடு

காத்து இறந்த பின்னரும் தனது

குடும்பம் தன் மக்களைக் காக்கும்

என்ற புனிதர்களுக்காகவும் 

முரசே நீ கொட்டுவாயா???



-  அருண் குமார் முத்தழகன்


எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் 

ஏகே கவிதைகள்


No comments:

Post a Comment